9th std -tamil new book

1.பொறி மயிர் வாரணம் கூட்டுறை வயமா புலியொடு குழும இது எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
மதுரைக்காஞ்சி


2.பெருகு வள மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்?
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்


3.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரீச்சம் பள்ளி சந்தை எத்தனை ஆண்டுகள் பழமையானது?
125 ஆண்டு


4.நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் என்ற நூலை எழுதியவர் யார்?
முனைவர் சு .சக்திவேல்


5.தரங்கம்பாடி தங்கப் புதையல் என்ற நூலை எழுதியவர் யார்?
பெ.தூரன்


6.இருட்டு எனக்கு பிடிக்கும்( அன்றாட வாழ்வில் அறிவியல்) என்ற நூலை எழுதியவர் யார் ?
.தமிழ்ச்செல்வன்


7.கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் என்று சிற்பக் கலையைப் பற்றி குறிப்பிடும் நூல் எது?
திவாகர நிகண்டு


8.மாளிகைகளில் பல சுண்ணாம்புக் கலவை சுதை சிற்பங்கள் இருந்ததை என்ற நூலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது?
         மணிமேகலை


9.குறுந்தொகை கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை பாடல்களைக் கொண்டது?
                           401


10.குறுந்தொகையை 1915 ஆம் ஆண்டு முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
சௌரிப் பெருமாள் அரங்கனார்


11.யாஎன்பதன் பொருள் என்ன?
ஒரு வகை மரம் (பாலை நிலத்தில் வளர்வது)


12.இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?
யாருடைய ஹைக்கூ இது?
அமுதோன்


13.பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்
நா முத்துக்குமார்


14.வெட்டுக்கிளியின் சப்தத்தில்
மலையின் மௌனம்
ஒரு கணம் அசைந்து திரும்புகிறது
ஜப்பானிய கவிஞர் பாஷோ


15.நான் மனிதன் மனிதனை சார்ந்த எதுவும் எனக்கு புறம் அன்று என்று கூறியவர் யார்?
       தெறன்ஸ்(லத்தீன் புலவர்)


16.முதிர்ந்த ஆளுமைக்கு 3 இலக்கணங்கள் இன்றியமையாதவை என்று கூறியவர் யார்?
கோர்டன் ஆல்போர்ட்



17.பூட்கை இல்லோன் யாக்கை போல என்னும் அடிகளை கூறியவர் யார்?
புலவர் ஆலத்தூர் கிழார்


18.திருக்குறள் போன்ற உயர்ந்த கொள்கைகளை கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது என்று கூறியவர் யார்?
   
           ஆல்பர்ட் சுவைட்சர்


19.படுதிரை வையம் பாத்திய பண்பே இது எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
              தொல்காப்பியம்


20.உண்டாலம்ம இவ்வுலகம் என்பது எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
               புறப்பாட்டு


21.இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆய் அலன்
இது எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
           புறப்பாட்டு


22.பண்புடைமை என்பது யாவர் மாட்டும் அவரோடு அன்பினராய் கலந்து ஒழுகுதலும் ,அவரவர் வருத்தத்திற்கு  பரிதலும், பகுத்து உண்டலும், பழி நாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை என்று கூறியவர் யார்?
                பரிப்பெருமாள்


23.எல்லோருடைய நாடுகளும் நமக்கு தாய் நாடு என்றும் நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருத வேண்டும் என்று கூறியவர் யார்?
செனக்கா


24.நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன் நான் அன்டோநீனஸ்  ஆதலால் உரோமுக்கு உரியவன். நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன் என்று கூறியவர் யார்?
மார்க்ஸ் அரேலியஸ்( பேரரசர்)


25.திருவள்ளுவரை உலக புலவர் என போற்றியவர் யார்?
           ஜி.யு. போப்

1 comment:

  1. ளளளறவொஎண
    ளளளறவொஎணஓஊஎத

    ReplyDelete

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.