11th std tamil-new book-QA-இயல்-7
1)பெரியகோயிலின் கோபுரங்களில் உயரமானது எந்த கோபுரம்?
⭐கேரளாந்தகன் கோபுரம்
2)எதன் நினைவாக கேரளாந்தகன் வாயில் கோபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது?
⭐ராஜராஜன் 988 இல் சேரநாட்டை வெற்றிகொண்டதை போற்றும் வகையில்
3)கருவறையை எவ்வாறு அழைப்பர் ?
⭐அகநாழிகை
4)நம் நாட்டில் உள்ள கற்றளி கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் எந்த கோவில்?
⭐தஞ்சை பெரிய கோவில்
5)செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கட்டுவதுபோல கருங்கற்களை அடுக்கி கட்டுவதற்கு என்ன பெயர்?
🌟 கற்றளி
6)ராஜராஜசோழன் எத்தனை ஆண்டுகள் முயன்று தஞ்சை பெரிய கோவிலை கட்டினான்?
🌟 ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்
7)தஞ்சை பெரிய கோவில் விமானம் ராஜராஜ சோழனால் எவ்வாறு அழைக்கப்பட்டது?
🌟தட்சிண மேரு
8)தஞ்சை பெரிய கோயிலின் விமானம் எத்தனை அடி உயரம் உடையது ?
⭐216
9)தஞ்சை பெரிய கோவிலின் கருவறை விமானம் எத்தனை தளங்களை உடையது?
⭐ 13
10)கற்றளி வடிவம் எந்த மன்னனால் உருவாக்கப்பட்ட வடிவம் ?
⭐இரண்டாம் நரசிம்மவர்மன் (ஏழாம் நூற்றாண்டு)
11)கற்றளி கோவில்களுக்கு எடுத்துக்காட்டு தருக ?
⭐மகாபலிபுரம் கடற்கரை கோவில்
⭐காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
⭐பனைமலை கோவில்
12)தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜசோழன் எந்த ஆண்டு தொடங்கி எந்த ஆண்டு வரை கட்டினார் ?
⭐1003 -1010
13)தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு எப்போது நிறைவடைந்தது?
⭐2010
14)மண்ணால் கட்டப்பட்டு மேலே மரத்தால் சட்டமிட்ட கோவில்களுக்கு எடுத்துக்காட்டு தருக ?
⭐தில்லைக் கோவில்
⭐குற்றாலநாதர் கோவில்
15)செங்கற்களை அடுக்கி சோழன் செங்கணான் எத்தனை கோவில்களை கட்டி இருப்பதாக திருநாவுக்கரசர் தம் பதிகத்தில் குறிப்பிடுகிறார்?
⭐78
16)செங்கல், சுண்ணம், மரம் உலோகம் முதலியவை இல்லாமல் பிரம்ம விஷ்ணுக்களுக்கு விசித்திர சித்தன் என்று அழைக்கப்பட்ட முதலாம் மகேந்திரவர்மன் குடைவரைக் கோயில்களை அமைத்ததாக எந்த கல்வெட்டு கூறுகின்றது ?
⭐மண்டகப்பட்டு கல்வெட்டு
17)காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் யாரால் கட்டப்பட்டது?
⭐இராஜ சிம்மன்
18)காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
⭐ராஜ சிம்மேச்சுரம்
19)கட்டிடக்கலை என்பது உறைந்துபோன இசை என்று குறிப்பிட்டவர் யார் ?
⭐பிரடிரிகா வொன்ஸ் லீவிங்
20)இந்திய கட்டிடக்கலை பாணியில் எவ்வாறு பிரிப்பர் ?
⭐நாகரம்
⭐வேசரம்
⭐திராவிடம்
21)தஞ்சை பெரிய கோவில் எந்த கலைப்பாணியை சேர்ந்தது?
⭐எண் பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணி
22)ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார் என்பதை உறுதிப்படுத்திய அறிஞர் யார்?
⭐ஷூல்ஸ் (ஜெர்மனி ) - 1886 இல்
23)தஞ்சை பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களிலும் சுற்று கூடம், சாந்தார நாழியில் பகுதி சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன்முதலில் கண்டறிந்தவர் யார் ?
⭐எஸ் கே கோவிந்தசாமி(1930 இல் கண்டறிந்தார்)
24)தஞ்சை பெரிய கோவிலின் கருவறையில் வரையப்பட்டிருந்த ஓவியங்களுக்கு என்ன வகை ஓவியங்கள் என்று பெயர்?
⭐ ஃ பிரஸ்கோ வகை ஓவியங்கள்
25)ஃப்ரெஸ்கோ என்பது எந்த மொழிச்சொல்?
⭐இத்தாலிய சொல்
26) ஃப்ரெஸ்கோ என்பதற்கு என்ன பொருள்?
⭐புதுமை
27)ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்களை எந்தெந்த இடங்களில் காண இயலும்?
⭐அஜந்தா
⭐எல்லோரா
⭐சித்தன்னவாசல்
28)தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தியும், மண்டபமும் எந்த காலத்தை சேர்ந்தது?
⭐நாயக்கர் காலம்
29)பதிமூன்று தளங்களை உடைய கருவறை விமானத்தின் மேல் எண்பட்டை அமைப்பில் ஆரஞ்சு பழத்தைப் போன்று 8 கற்கள் நெருக்கமாக வைத்து ஒட்டப்பட்டது. அந்தக் கல்லின் பெயர் என்ன?
⭐பிரமந்திரக் கல்
30)வெளிக் கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களை கட்டும் புதிய மரபை தோற்றுவித்த மன்னன் யார்?
⭐ராஜராஜன்
31) நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப்பெறும் மரபு யார் காலத்திலிருந்து தொடங்கியது?
⭐இரண்டாம் குலோத்துங்க சோழன்
32).ராஜராஜனின் பட்டத்தரசி ஒலோக மாதேவி திருவையாற்றில் கட்டிய கோவில் எவ்வாறு அழைக்கப்படும்?
⭐ ஒலோக மாதேவீச்சரம்
33)ஒலோக மாதேவீர்ச்சரம் கோவில் கல்வெட்டில் பெண் அதிகாரியை ப் பற்றி எவ்வாறு குறிப்பிடப் படுகிறது?
⭐எருதந் குஞ்சர மல்லி.
34)முதலாம் ராஜாதி ராஜன் காலத்தில் குறுப்பிடப்பட்டுள்ள பெண் அதிகாரியின் பெயர் என்ன?
⭐சோமயன் அமிர்த வல்லி.
35) தஞ்சைப் பெரிய கோவிலில் குறிப்பிடப்ட்டுள்ள தச்சர்களின் பெயர் என்ன?
⭐வீர சோழன் குஞ்சர மல்லன் இராசராசப் பெருந்தச்சன்
⭐மதுராந்தகனான நித்த வினோத பெருந்தச்சன்
⭐இலத்தி சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்
36)ஆத்மாநாம் அவர்களின் இயற்பெயர் என்ன?
⭐ மதுசூதனன்
37)ஆத்மாநாமின் முக்கியமான கவிதைத் தொகுப்பு எது?
⭐ காகிதத்தில் ஒரு கோடு.
38) ஆத்மாநாம் நடத்திய சிற்றிதழ் பெயர் என்ன?
⭐ ழ
39)கொத்து என்பதன் பொருள் என்ன ?
⭐பூமாலை
40) குழல் என்பதன் பொருள் என்ன?
⭐கூந்தல்
41)நாங்கூழ் என்பதன் பொருள் என்ன?
⭐மண்புழு
42) கோலத்து நாட்டார் என்பதன் பொருள் என்ன?
⭐கலிங்க நாட்டார்
43)வரிசை என்பதன் பொருள் என்ன?
⭐சன்மானம்
44)தமிழ்நாட்டில் குற்றாலம் என்னும் ஊர் எங்கு அமைந்துள்ளது?
⭐தென்காசி அருகே
45)திரிகூடராசப்பக் கவிராயரின் கவிதை கிரீடம் என்று போற்றப்படும் நூல் எந்த நூல் ?
⭐குற்றால குறவஞ்சி
46)குற்றால குறவஞ்சி என்னும் நூல் யாருடைய விருப்பத்திற்கு இணங்க பாடி அரங்கேற்றப்பட்டது?
⭐மதுரை முத்து விசயரங்க சொக்கலிங்கனார்
47)திரிகூடராசப்பக் கவிராயர் எந்த ஊரை சேர்ந்தவர்?
⭐திருநெல்வேலி
48)திருக்குற்றால நாதர் கோவில் வித்துவான் என்று சிறப்புப் பெயர் பெற்றவர் யார் ?
⭐திரிகூட ராசப்ப கவிராயர்
49) திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலத்தின் மீது எந்தெந்த நூல்களை இயற்றியுள்ளார்?
⭐ தலபுராணம்
⭐மாலை
⭐சிலேடை
⭐பிள்ளைத்தமிழ்
⭐யமக அந்தாதி
50)மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகையின் பெயர் என்ன?
⭐ திருச் சாழல்
51)சாழல் என்பது என்ன ?
⭐பெண்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு
52)சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பான திருவாசகத்தை எழுதியவர் யார்?
⭐ மாணிக்கவாசகர்
53) சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் அமைந்துள்ளது?
⭐எட்டாம் திருமறை
54)திருவாசகத்தில் எத்தனை திருப் பதிகங்கள் உள்ளன?
⭐ 51
55)திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் அடங்கி உள்ளன?
⭐658
56)திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பாடப்பெற்றுள்ளன?
⭐38
57)திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
⭐ஜி யு போப்
58) திருச்சாழல் எந்த கோவிலில் பாடப் பெற்றது?
⭐தில்லைக்கோவில்
59) மாணிக்கவாசகர் எந்த ஊரை சேர்ந்தவர்?
⭐திருவாதவூர்
60)மாணிக்கவாசகன் யாரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார் ?
⭐அரிமர்த்தன பாண்டியன்
61) மாணிக்கவாசகர் இயற்றிய நூல்களின் பெயர் என்ன?
⭐திருவாசகம்
⭐திருக்கோவையார்
62) காயில் என்பதன் பொருள் என்ன?
⭐ வெகுண்டால்
63)அந்தம் என்பதன் பொருள் என்ன ?
⭐முடிவு
64)அயன் என்பதன் பொருள் என்ன ?
⭐பிரமன்
65)மால் என்பதன் பொருள் என்ன?
⭐விஷ்ணு
66)ஆலாலம் என்பதன் பொருள் என்ன?
⭐நஞ்சு
67)இளையராஜா தமிழ் நாட்டின் எந்த ஊரை சேர்ந்தவர்?
⭐தேனி மாவட்டம் பண்ணைப்புரம்
68) இளையராஜா அவருடைய இயற்பெயர் என்ன ?
⭐இராசையா
69)சிம்பொனி இசை கோலத்தை எந்த குழுவிற்கு அமைத்துக் காட்டினார் இளையராஜா?
⭐ராயல் ஃபில்ஹார்மானிக் இசைக்குழு .
70)இளையராஜா எந்த படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்?
⭐அன்னக்கிளி.
71)இளையராஜா பெற்ற விருதுகளின் பெயர்கள் என்னென்ன ?
⭐இந்திய அரசு- பத்ம விபூஷண் விருது
⭐சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது
⭐ சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது
⭐தமிழ்நாடு -கலைமாமணி விருது
⭐மத்திய பிரதேசம்- லதா மங்கேஷ்கர் விருது
⭐கேரளம் -நிஷாகந்தி சங்கீத விருது
72)இளையராஜா வெளியிட்ட இசை தொகுப்புகளின் பெயர் என்னென்ன?
⭐ எப்படி பெயரிடுவேன்
⭐ காற்றைத் தவிர ஏதும் இல்லை
73) காற்றைத் தவிர ஏதும் இல்லை என்னும் இசைத் தொகுப்பு யாருடன் இணைந்து வெளியிடப்பட்டது?
⭐புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராசியா .
74)மகிழ்ச்சி ,ஏக்கம் ,நம்பிக்கை உற்சாகம் ,வலி போன்ற மனித உணர்வுகளுக்கு இசை வடிவம் கொடுக்க முடியும் என்பதை எந்த ஆவண குறும்படத்தின் பின்னணி இசையில் இளையராஜா வெளிப்படுத்தினார்?
⭐இந்தியா 24 மணி நேரம்
75)மாணிக்கவாசகர் எழுதிய திருவாசக பாடல்களுக்கு இளையராஜா எந்த இசை வடிவில் இசை அமைத்துள்ளார் ?
⭐ஆரட்டோரியா .
76)இளையராஜா வெளியிட்ட தமிழிசை தொகுப்புகளின் பெயர்கள் என்னென்ன?
⭐ராஜாவின் ரமண மாலை
⭐இளையராஜாவின் கீதாஞ்சலி
77) இளையராஜா கன்னட மொழியில் எந்த பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்?
⭐ மூகாம்பிகை
78) ஆதிசங்கரர் எழுதிய எந்த பக்தி பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்?
⭐மீனாட்சி ஸ்தோத்திரம்
79). இளைய ராஜா உருவாக்கிய கர்நாடக செவ்வியல் ராகத்தின் பெயரைக் குறிப்பிடு?
⭐பஞ்ச முகி
80) இளையராஜா அரை நாளில் பிண்ணனி இசை அமைத்த திரைப்படம் எது?
⭐ 100வது நாள்
81). இளையராஜா எழுதிய நூல்களின் பெயர் என்ன?
⭐பால் நிலாப்பாதை
⭐வெட்ட வெளிதனில் கொட்டிக்கிடக்குது
82)பரிபாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள பண்களின் பெயர்கள் என்னென்ன?
⭐நோதிறம்
⭐பாலை யாழ்
⭐காந்தாரம்
83)சைவத் திருமுறைகளில் காரைக்கால் அம்மையார் பயன்படுத்திய பண்களின் பெயர்களில் குறிப்பிடப்படுக ?
⭐நட்டபாடை
⭐இந்தளம்
84)தேவாரத்தில் எத்தனை
பண்களில் பாடல்கள் உள்ளன?
⭐23
85)தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்களின் பெயர்களைக் குறிப்பிடுக ?
⭐நைவளம்
⭐அந்தாளி
⭐தோடி
⭐கல்வாணம்
⭐பியந்தை
⭐குறண்டி
⭐முதிர்ந்த இந்தளம்
86)ஒன்பதாம் திருமறையான திருவிசைப்பாவில் காணப்படும் பண் எது?
⭐ சாளர பாணி
87)மகாத்மா காந்தி எழுதிய இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்?
⭐நம்ரதா கே சாகர்
88) நம்ரதா கே சாகர் என்னும் பாடலை பாடியவர் யார்?
⭐ஹிந்துஸ்தானி இசை கலைஞர் அஜொய்சக்கரபர்த்தி
89) ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி என்னும் மேற்கத்திய செவ்வியல் இசைக் கோவையை உருவாக்கியவர் யார்?
⭐இளையராஜா.
90)சிறந்த திரைப்பட பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருதும், சிறந்த திரை இசைப் பாடலுக்கான ஆஸ்கர் விருதும் எந்த ஆண்டில் பெற்றார் ?
⭐2009
91)ஏ ஆர் ரஹ்மானின் தந்தை யார் ?
⭐ஆர் கே சேகர்
92)ஏ ஆர் ரகுமான் எந்த ஆண்டில் ரோஜா என்னும் திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக தன்னுடைய வாழ்வைத் தொடங்கினார்?
⭐ 1992
93)பிங்கல நிகண்டு என்னும் நூலில் எத்தனை பண்கள் காணப்படுகின்றன?
⭐103 பண்கள்
94)பண்கள் பாடும் காலங்களுக்கு ஏற்ற வாறு எவ்வாறு வகுக்கப்பட்டுள்ளன?
⭐ பகல் பண்
⭐இரவு பண்
⭐பொது பண்
95) A.R.ரகுமான் பெற்ற விருதுகளின் பெயர்கள் என்னென்ன?
⭐இந்திய அரசு- பத்ம பூஷன் விருது
⭐தமிழ்நாடு- கலைமாமணி விருது
⭐கேரளம்- தங்கப்பதக்கம்
⭐உத்திரப்பிரதேசம்- ஆவாத் சம்மான் விருது
⭐மத்திய பிரதேசம்- லதா மங்கேஷ்கர் விருது
- ⭐மொரீசியஸ் தேசிய இசை விருது
⭐மலேசியா -தேசிய இசை விருது
⭐ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் - சர்வ தேச இசை விருது
96)திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்தியவர் யார்?
⭐A.R.ரஹமான்
97)A.R.ரகுமான் எந்த திரைப்படத்தில் இசைக்காக கோல்டன் குளோப் விருது பெற்றார்?
⭐ஸ்லம்டாக் மில்லியனர்
98) இசைக்கான கிராமி விருதை எந்த படத்திற்காக பெற்றார்?
⭐ஸ்லம்டாக் மில்லியனர்
99)20க்கும் மேற்பட்ட துறைகளுக்கு கலைச்சொற்களை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
⭐ தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்
100)தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை எனும் தலைப்பில் கட்டுரை எழுதத் தொடங்கிய பாரதி எந்த ஆங்கில சொல்லுக்கு தமிழ் சொல் ஒன்றை உருவாக்க முனைந்தார்?
⭐Member
101)சிவானந்த நடனம் என்ற நூலை எழுதியவர் யார் ?
⭐ஆனந்த குமாரசுவாமி
102) தஞ்சை பெருவுடையார் கோவில் -ராச ராசேச்சுரம் - கோவில் நுட்பம் என்ற நூலை எழுதியவர் யார்?
⭐குடவாயில் பாலசுப்ரமணியன்
103)தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க
எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் யார்?
⭐கம்பர்
104)சங்கரதாசு சுவாமிகளின் காலம் என்ன?
⭐1867 -1922
105)சங்கரதாசு சுவாமிகள் யாரிடம் தமிழ் அறிவைப் பெற்றார?
⭐புலவரேறு பழனி தண்டபாணி
106)சங்கரதாசு சுவாமிகள் எத்தனையாவது வயதிலேயே கவி ஆற்றல் பெற்று வெண்பா, கலித்துறை இசை பாடல்களை இயற்றத் தொடங்கினார்?
⭐16
107)இரணியன், இராவணன், எமதர்மன் ஆகிய வேடங்களில் சங்கரதாச சுவாமிகள் நடித்து புகழ் அடைந்த போது அவருடைய வயது என்ன?
⭐24
108)சங்கரதாஸ் சுவாமிகள் உருவாக்கிய நாடகக் குழுவின் பெயர் என்ன ?
⭐சமரச சன்மார்க்க சபை
109)சமரச சன்மார்க்க சபையில் பயிற்சி பெற்று நாடக கலை துறையில் பெரும் புகழ் பெற்றவர் யார்?
⭐எஸ்.ஜி. கிட்டப்பா
110)சங்கரதாசு சுவாமிகள் மதுரையில் 1918ல் உருவாக்கிய நாடக அமைப்பின் பெயர் என்ன?
⭐தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை
111)தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் பயிற்சி பெற்றவர்கள் யார்?
⭐டிகேஎஸ் சகோதரர்கள்
112)தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்று அழைக்கப்படுபவர் யார்?
⭐சங்கரதாசு சுவாமிகள்
Post a Comment