6th std tamil-50 Q&A
1)மூதுரை என்னும் நூலில் எத்தனை பாடல்கள் இடம்பெற்றுள்ளன?
⚡31
2)ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே -நீ
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
என்ற பாடலை எழுதியவர் யார்?
⚡பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
3)நடுவண் அரசு பெருந்தலைவர் காமராஜருக்கு எந்த வருடம் பாரத ரத்னா விருது வழங்கியது?
⚡1976
4)கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் எந்த வருடம் அமைக்கப்பட்டது?
⚡அக்டோபர் 2 ,2000
5)காமராஜரை கல்விக் கண் திறந்தவர் என்று மனதார பாராட்டியவர் யார் ?
⚡தந்தை பெரியார்
6)ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?
⚡அண்ணா நூற்றாண்டு நூலகம்
7)ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
⚡சீனா
8)இந்திய நூலக அறிவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார் ?
⚡இரா அரங்கநாதன்
9)சிறந்த நூலகர்களுக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?
⚡டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் விருது
10)அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தனை தளங்கள் உள்ளன ?
⚡எட்டு தளங்கள்
11)தமிழ் எழுத்துகளில் எதற்கு மட்டும் இன எழுத்து இல்லை?
⚡ஆயுத எழுத்து
12)நட்டல் என்பதன் பொருள் என்ன ?
⚡நட்புக் கொள்ளுதல்
13)ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார்?
⚡பெருவாயின் முள்ளியார்
14)பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது ?
⚡கயத்தூர்
15)ஆசாரக்கோவை என்பதற்கு என்ன பொருள்?
⚡நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
16)ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?
⚡100
17)முத்தேன் என்ற தொகைச்சொல்லின் விளக்கம் என்ன?
⚡கொம்புத்தேன்,பொந்துத்தேன்,கொசுத்தேன்
18)ஆந்திரா ,கர்நாடகா, மகாராஷ்டிரா ,உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
⚡மகா சங்கராந்தி
19) பஞ்சாப் மாநிலத்தில் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
⚡லோரி
20)குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
⚡உத்தராயன்
21)பஞ்சபாண்டவர் ரதங்கள் யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?
⚡நரசிம்மவர்மன்
22)நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டை சேர்ந்த மன்னன்? ⚡ஏழாம் நூற்றாண்டு
23)சிற்பக்கலை எத்தனை வகைப்படும் ?
⚡நான்கு
24)திராவிட நாட்டின் வானம்பாடி என்ற பாராட்டப் பெற்றவர் யார்? ⚡முடியரசன்
25)நெய்தல் திணையின் பூ எது? ⚡தாழம்பூ
26)விடிவெள்ளி நம்விளக்கு- ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம்- ஐலசா எனத் தொடங்கும் நாட்டுப்புறப்பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
⚡சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு
27)பொருள்களை வண்டியில் ஏற்றி வெளியூருக்கு செல்லும் வணிகக் குழுவை எவ்வாறு அழைப்பர்?
⚡வணிகச்சாத்து
28)தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சுற்றி
............
உமணர் போகலும்
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
⚡நற்றிணை
29)பாலொடு வந்து கூழொடு பெயரும்
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
⚡குறுந்தொகை
30)பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
⚡அகநானூறு
31)சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன?
⚡ கண்ணாடி ,கற்பூரம் ,பட்டு
32)நடுநின்ற நன்னெஞ்சினோர் என்று வணிகர்களை பாராட்டும் நூல் எது?
⚡பட்டினப்பாலை
33)கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறை படாது
என்று குறிப்பிடும் நூல் எது?
⚡பட்டினப்பாலை
34)பாடுபட்டுத் தேடியப் பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்பது யாருடைய அறிவுரை?
⚡ அவ்வையார்
35)அண்மை சுட்டெழுத்து எது?
⚡இ
36)சேய்மை சுட்டெழுத்து எது?
⚡அ
37)நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர் யார்? ⚡முடியரசன்
38)தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
⚡ராதாகிருஷ்ணன்
39)தாரா பாரதிக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர் என்ன?
⚡கவிஞாயிறு
40)தேசம் உடுத்திய நூலாடை என்று தாராபாரதி குறிப்பிடும் நூல் எது ?
⚡திருக்குறள்
41)காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும் இடமாக தாராபாரதி குறிப்பிடுவது?
⚡காவிரிக்கரை
42)பாரதம் அன்றைய நாற்றாங்கால் என்ற கவிதையை எழுதியவர் யார் ?
⚡தாராபாரதி
43)காந்தியடிகள் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் எது?
⚡மதுரை
44)காந்தியடிகள் எந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என விரும்பினார்?
⚡ உ.வே.சா
45)பாரதியாரை தமிழ்நாட்டின் சொத்து எனக் குறிப்பிட்டவர் யார்? ⚡ராஜாஜி
46)தமிழ் கையேடு என்பது யார் எழுதிய நூல் ?
⚡ஜி யு போப்
47)எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயருடன் போரிட்டு வீரமரணமடைந்தார்? ⚡காளையார்கோவில்
48)வேலு நாச்சியாரின் அமைச்சர் பெயர் என்ன ?
⚡தாண்டவராயன்
49)வேலு நாச்சியார் காளையார் கோவில் மீட்க சென்ற போது பெண்கள் படைப்பிரிவிற்கு தலைமை தாங்கியவர் யார்?
⚡குயிலி
50))வேலு நாச்சியார் காளையார் கோவில் மீட்க சென்ற போது ஆண்கள் படைப்பிரிவிற்கு தலைமை தாங்கியவர் யார்?
⚡மருது சகோதரர்கள்
Thanking you sister
ReplyDeleteThank you very much sister.
ReplyDeleteTq so much
ReplyDeleteTq so much
ReplyDelete