11th std tamil-இயல்-8-Q A
1)காற்றில் கலந்த பேரோசை என்னும் கட்டுரையில் சுந்தர ராமசாமி யாரைப் பற்றி குறிப்பிடுகிறார்?
⭐ஜீவா
2)சுந்தர ராமசாமி எந்த ஊரை சேர்ந்தவர் ?
⭐நாகர்கோவில்
3) சுந்தர ராமசாமி எந்த புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் ?
⭐பசுவய்யா
4)சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகள் பெயர்கள் என்னென்ன?
⭐ரத்னாபாயின் ஆங்கிலம் ⭐காகங்கள்
5) சுந்தர ராமசாமி எழுதிய புதினங்களின் பெயர்கள் என்னென்ன?
⭐ஒரு புளிய மரத்தின் கதை
⭐ஜே ஜே சில குறிப்புகள் ⭐குழந்தைகள் பெண்கள் ஆண்கள்.
6) சுந்தர ராமசாமி மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த புதினங்கள் யாவை ?
⭐செம்மீன் ,
⭐தோட்டியின் மகன்
7)காற்றில் கலந்த பேரோசை என்னும் சுந்தர ராமசாமியின் கட்டுரை எந்த இதழில் வெளியானது?
⭐தாமரை (1963இல்)
8)கனிகள் என்பதன் பொருள் என்ன?
⭐உலோகங்கள்
9) மீட்சி என்பதன் பொருள் என்ன?
⭐விடுதலை
10) நவை என்பதன் பொருள் என்ன?
⭐குற்றம்.
11)படி என்பதன் பொருள் என்ன?
⭐உலகம்
12)உலகக் கவிதைகள் தொகுப்பு யாருடையது ?
⭐பிரம்மராஜன்
13)வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் எனும் காவியத்தை தழுவி தமிழில் பாரதிதாசனால் எழுதப்பட்டது ?
⭐புரட்சிக்கவி
14) புரட்சிக்கவி எந்த ஆண்டு எழுதப்பட்டது ?
⭐1937இல்
15) குயில் என்ற இலக்கிய இதழை நடத்தியவர் யார்?
⭐பாவேந்தர் பாரதிதாசன்
16) பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் யார்?
⭐பாவேந்தர் பாரதிதாசன்
17) வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே எனும் இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலை எந்த அரசு தமிழ்த் தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ளது?
⭐புதுவை அரசு
18) தமிழக அரசு பாரதிதாசன் பெயரில் எங்கு பல்கலைக்கழகம் நிறுவி உள்ளது?
⭐திருச்சி.
19)பதி என்பதன் பொருள் என்ன?
⭐ நாடு
20)நிரையம் என்பதன் பொருள் என்ன ?
⭐நரகம்
21)புரையோர் என்பதன் பொருள் என்ன ?
⭐சான்றோர்
22) யாணர் என்பதன் பொருள் என்ன?
⭐ புதுவருவாய்
23) மருண்டெனன் என்பதன் பொருள் என்ன?
⭐ வியப்பு அடைந்தேன்
24) தண்டா என்பதன் பொருள் என்ன ?
⭐ஓயாத
25) கடுந்துப்பு என்பதன் பொருள் என்ன ?
⭐மிகு வலிமை
26) ஒடியா என்பதன் பொருள் என்ன?
⭐குறையா
27)உதியன் சேரலாதன் , வேண் மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் யார்?
⭐ இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
28)சேரலாதனின் நாடு காத்தற் சிறப்பையும், கொடைச் சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் எந்த நூலில் பாடலை எழுதியுள்ளார்?
⭐பதிற்றுப்பத்து ( 2 ம் பத்து)
29)சேர மன்னர்கள் 10 பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் பதிற்றுப்பத்து நூல் எந்த திணையில் அமைந்துள்ளது?
⭐பாடாண் திணை
30) பாடாண் திணையின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
⭐இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்
31) உம்பற்காட்டில் ஐநூறு ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றவர் யார்?
⭐குமட்டூர் கண்ணனார்
32)வீட்டுக்கு உயிர்வேலி!
வீதிக்கு விளக்குத்தூண் !
நாட்டுக்கு கோட்டை மதில்!
நடமாடும் கொடிமரம் நீ
என்று இளைஞர்களைப் பற்றி பாடியவர் யார்?
⭐கவிஞர் தாரா பாரதி
33)"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" என்று பாடியவர் யார்?
⭐பாரதி
34)"தமிழா பயப்படாதே.
வீடு தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்
என்று கட்டளையிட்டவர் யார்?
⭐பாரதியார்
35)தேடு கல்வி இலாததோர் ஊரைத்
தீயி னுக் கிரையாக மடுத்தல்
என்று கல்விக்கூடங்களின் இன்றியமையாமையை சினத்துடன் கூறியவர் யார்?
⭐ பாரதியார்
36)பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்
என்று கூறியவர் யார் ?
⭐பாரதி
37)பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில்
மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே
என்று கூறியவர் யார்?
⭐பாரதிதாசன்
38)வீட்டிற்கோர் புத்தகச்சாலை வேண்டும் என்று கூறியவர் யார்?
⭐அறிஞர் அண்ணா
39)விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானிட சமுத்திரம் நானென்று கூவு
புவியை நடத்து; பொதுவில் நடத்து !
என்று உலகத்தையே வீடாகக் காட்டியவர் யார்?
⭐ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
40)"பட்டி மண்டபத்து பாங்கறிந்து ஏறுமின்" என்று பட்டிமன்றத்தை பற்றி குறிப்பிடும் காப்பியம் எது?
⭐மணிமேகலை
41)ஜீவா வாழ்க்கை வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்?
⭐கே. பாலதண்டாயுதம்
42) சொல்லாக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?
⭐இ .மறைமலை
43)ஹைக்கூ என்பதற்கு தமிழில் என்ன பெயர் ?
⭐துளிப்பா
44) பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டு சொன்னது பூமி 'ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ '
என்ற கவிதை எழுதியவர் யார்?
⭐ ஈரோடு தமிழன்பன்
45) எப்போதும் மத்தாப்பு கொளுத்தி விளையாடுகிறது மலையருவி
என்ற கவிதையை எழுதியவர்
யார் ?
⭐கழனியூரன்
46)சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்
சுகம் தரும் உணர்ச்சியும் வேறு உண்டோ?
என்ற கவிதையை எழுதியவர் யார்?
⭐நாமக்கல் கவிஞர்
47)மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் வாழ்ந்த காலம் என்ன ?
⭐1900- 1980
48)மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய கட்டுரைகளின் பெயர் என்ன?
⭐ராமேசுவரத் தீவு
⭐உறையூர் அழிந்த வரலாறு
⭐ மறைந்து போன மருங்காப் பட்டினம்
49)மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய வரலாற்று நூல்களின் பெயர் என்னென்ன?
⭐ கொங்கு நாட்டு வரலாறு
⭐ துளுவ நாட்டு வரலாறு
⭐சேரன் செங்குட்டுவன் ⭐மகேந்திரவர்மன்
⭐நரசிம்மவர்மன்
⭐மூன்றாம் நந்திவர்மன்
50)இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் சொல்லப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டிய நூல் எது ?
⭐களப்பிரர் கால தமிழகம்
51).மயிலை சினி வேங்கடசாமி அவர்களுக்கு தெரிந்த மொழிகள் என்ன?
⭐ஆங்கிலம்
⭐மலையாளம்
⭐கன்னடம்
52)மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல்களின் பெயர்களை எழுதுக.
⭐கிறிஸ்துவமும் தமிழும்
⭐சமணமும் தமிழும்
⭐ பௌத்தமும் தமிழும்
⭐ மறைந்து போன தமிழ் நூல்கள்
53)மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கு மதுரைப் பல்கலைக் கழகம் 1980 ஆம் ஆண்டு எந்த பட்டமளித்துப் பாராட்டியது?
⭐தமிழ்ப் பேரவைச் செம்மல்
54)பெயர் அல்லது வினைச் சொற்களுடன் விகுதிகளை சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
⭐ஆக்கப் பெயர்கள்
55) ஆக்க பெயர்கள் என்னென்ன?
⭐காரன்
⭐காரர்
⭐ காரி
⭐ஆள்
⭐ஆளர்
⭐ஆளி
⭐தாரர்
⭐மானம்
Post a Comment