11th std tamil new book- இயல்-9-Q A
1)சித்தர்களை குறிப்பிடும் நிறைமொழி மாந்தர் என்னும் சொல் எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது?
⚡தொல்காப்பியம், திருக்குறள்
2)சித்தன் என்னும் சொல் சிலப்பதிகாரத்தின் எந்த காதையில் இடம்பெற்றுள்ளது?
⚡நாடுகாண் காதை
3)சித்தர்கள் என்றால் என்ன பொருள்?
⚡நிறைவடைந்தவர்
4)தமிழில் சித்து என்னும் சொல்லுக்கு உள்ள பொருள்கள் என்னென்ன?
⚡மனம் ,கருத்து ,ஆன்மா
5)தமிழ்ப் பேரகராதியின் படி சித்தி என்னும் சொல்லிற்கு உள்ள பொருள்கள் என்னென்ன?
⚡மெய்யறிதல் ,வெற்றி ,காரியம் கைகூடல்
6)சித்தர்களின் ஆதிசித்தர் என்று கருதப்படுபவர் யார் ?
⚡திருமூலர்
7)திருமூலரின் காலம் எந்த நூற்றாண்டு?
⚡கிபி ஐந்தாம் நூற்றாண்டு அல்லது ஆறாம் நூற்றாண்டு
8)சித்தர்களின் கலகக்காரர் என்று கருதப்படுபவர் யார் ?அவரின் காலம் என்ன?
⚡சிவவாக்கியர் (ஒன்பதாம் நூற்றாண்டு)
9)எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
என்று கூறியவர் யார் ?
⚡பாரதியார்
10)ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பது யாருடைய கடவுள் கொள்கை?
⚡திருமூலர்
11) ஒன்றென்றிரு ,தெய்வம் உண்டென்றிரு என்று கூறியவர் யார்?
⚡பட்டினத்தார்.
12)ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை என்று கூறுவது எந்த நூல் ?
⚡திருமந்திரம்
13) தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது யாருடைய வாக்கு?
⚡திருமூலர்.
14)நாடொணாத அமிர்த முண்டு நான் அழிந்த நின்ற நாள் என்று கூறியவர் யார்?
⚡சிவவாக்கியர்
15)சித்தர்களை கிளர்ச்சியாளர்கள் என்று கூறியவர் யார் ?
⚡அறிஞர் க. கைலாசபதி
16)சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ என்று கூறியவர் யார் ?
⚡சிவவாக்கியர்
17)சாதிப் பிரிவினிலே தீயை மூட்டு வோம் என்று கூறியவர் யார் ?
⚡பாம்பாட்டி சித்தர்
18)ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்
என்று கூறியவர் யார்?
⚡பத்திரகிரியார்
20)உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
என்ற பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
⚡ திருமந்திரம் (திருமூலர்)
21)நந்தவனத்தில் ஓர் ஆண்டி- அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி-
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
என்ற பாடல் எழுதியவர் யார்?
⚡கடுவெளி சித்தர்
22)குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் குறிப்பிட சித்தர்கள் பயன்படுத்தும் சொல் எது?
⚡மாங்காய்ப்பால்
23)தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே!- ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!
நாதர்முடி மேலிருக்கும் வெண்ணிலாவே!- அங்கே
நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே!
என்ற பாடலை எழுதியவர் யார்?
⚡வள்ளலார்
24)விழுந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறது
அடடா .......வண்ணத்துப்பூச்சி என்ற ஹைக்கூவை எழுதியவர் யார் ?
⚡மோரிடாகே
25)பட்டுப்போன மரக்கிளை அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம் இலையுதிர் கால மாலை
என்ற ஹைக்கூவை எழுதியவர் யார்?
⚡பாஷோ
26)பெட்டிக்கு வந்தபின்
எல்லா காய்களும் சமம்தான் சதுரங்கக்காய்கள்
என்ற ஹைக்கூ எழுதியவர் யார்?
⚡இஸ்ஸா
27)சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது
என்பது யார் எழுதிய கவிதை ?
⚡பிரமிள்
28)பிரமிள் என்ற பெயரில் எழுதியவருடைய இயற்பெயர் என்ன?
⚡சிவராமலிங்கம்
29)சிவராமலிங்கம் எங்கு பிறந்தவர் ?
⚡இலங்கை
30)சிவராமலிங்கம் வேறு எந்த புனைப் பெயர்களில் எழுதி உள்ளார் ?
⚡பானுச்சந்திரன்
⚡அரூப் சிவராம்
⚡தருமு சிவராம்
31)சிவராமலிங்கம் எழுதிய சிறுகதை தொகுப்பின் பெயர் என்ன ?
⚡லங்காபுரி ராஜா
32)சிவராமலிங்கம் எழுதிய நாடகத்தின் பெயர் என்ன?
⚡ நட்சத்திரவாசி
33) சிவராமலிங்கம் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் பெயர் என்ன?
⚡ வெயிலும் நிழலும்
34) தொலைந்து போனவர்கள் என்ற கவிதையை எழுதியவர் யார் ?
⚡அப்துல் ரகுமான்
35)தொலைந்து போனவர்கள் என்ற கவிதை எந்தப் பா வகையில் அமைந்துள்ளது ?
⚡சிந்து
36)தொலைந்து போனவர்கள் என்ற கவிதை எந்த கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
⚡சுட்டுவிரல்
37)அப்துல் ரகுமான் எந்தக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றியவர் ?
⚡வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி
38)அப்துல் ரகுமான் எழுதிய நூல்களின் பெயர் என்னென்ன?
⚡பால்வீதி
⚡நேயர் விருப்பம்
⚡பித்தன்
⚡ஆலாபனை
39)அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள் என்னென்ன?
⚡பாரதிதாசன் விருது
⚡தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது
⚡ஆலாபனை எனும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதெமி விருது
40)மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியத்தின் ஆசிரியர் யார்?
⚡மௌலானா ரூமி (பிறப்பு-1207)
41) மெளலானா ரூமி எங்கு பிறந்தவர் ?
⚡ஆஃப்கானிஸ்தான் .
42)எத்தனையாவது நாளில் கண்ணனின் தந்திரத்தால் அர்ஜுனனின் தேர் சக்கரத்தில் கன்னன் சாய்கிறான் என்று வில்லிபாரதத்தில் குறிப்பிடப்படுகிறது ?
⚡17 ஆவது நாள் போர்
43)ஹோமரின் இலியட் ஒடிசி போன்ற இதிகாசங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டவை?
⚡கிரேக்க மொழி
44)வில்லிபாரதத்தை எழுதியவர் யார் ?
⚡வில்லிபுத்தூரார்
45)வில்லிபுத்தூரார் யாரால் ஆதரிக்கப்பட்டார் ?
⚡வக்கபாகை மன்னன் வரபதி ஆட்கொண்டான்
46)வில்லிபாரதம் எத்தனை பருவங்களைக் கொண்டது?
⚡பத்து பருவங்கள்
47) வில்லிபாரதம் எத்தனை விருத்தப் பாடல்களால் ஆனது?
⚡4351
48)வில்லி பாரதத்தின் முதல் பருவம் என்ன?
⚡ஆதி பருவம்
49) வில்லி பாரதத்தின் பத்தாம் பருவம் என்ன?
⚡சௌப்திக பருவம்
50)புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?
⚡சொ . விருத்தாசலம்
51)காஞ்சனை என்னும் சிறுகதைத் தொகுப்பு யார் எழுதியது ?
⚡புதுமைப்பித்தன்
52)சிறுகதை மன்னர் என்று போற்றப்படுபவர் யார்?
⚡புதுமைப்பித்தன்
53)மரணத்தின் பின் மனிதர் நிலை என்னும் நூலை இயற்றியவர் யார் ?
⚡மறைமலை அடிகள்
54)பல்வேறு வகையான நிறுத்தக் குறிகளை அறிமுகப்படுத்தி எந்தெந்த இடங்களில் அவற்றை பயன்படுத்த வேண்டும் என விளக்கியவர்கள் யார்?
⚡ஐரோப்பியர்கள்
55)செவ்வாழை என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
⚡பேரறிஞர் அண்ணா
56)அளி என்பதன் பல பொருள்கள் என்னென்ன?
⚡ அன்பு
⚡அருள்
⚡ குளிர்ச்சி
⚡வண்டு
⚡இரக்கம்
⚡எளிமை
57)வில்லிபாரதத்தில் சூரியனின் தோன்றல் என்று குறிப்பிடபடுபவர் யார்?
⚡கர்ணன்
58)வள்ளலார் எழுதிய நூல்கள் என்னென்ன?
⚡தெய்வமணிமாலை
⚡கந்தர் சரணப்பத்து
⚡மனுமுறை கண்ட வாசகம்
59)வள்ளலார் பதிப்பித்த நூல்கள் யாவை ?
⚡தொண்டை மண்டல சதகம் ⚡சின்மய தீபிகை
⚡ஒழிவில் ஒடுக்கம்
60)⚡கடவுள் ஒருவரே.
⚡அவரை சோதி வடிவில் உண்மை அன்பால் வழிபடவேண்டும்.
⚡சிறு தெய்வ வழிபாடு கூடாது.
⚡தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது.
⚡புலால் உண்ணலாகாது.
⚡ சாதி சமய வேறுபாடுகள் கூடா.
⚡எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி ஒழுகும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வை கடைப்பிடிக்க வேண்டும்.
⚡எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
⚡புராணங்களும் சாஸ்திரங்களும் முடிவான உண்மையை தெரிவிக்க மாட்டா .
⚡மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும் .என்று கூறியவர் யார்?
⚡வள்ளலார்
61)ஒன்றிலிருந் தொன்றென்னும் உலக நிலை அறிந்தேன் உணவுகளின் பிண்டம் தான் உடல் என்பதை அறிந்தேன்
என்னும் பாடலை எழுதியவர் யார்?
⚡சுரதா
62)என் வாழ்க்கை என் கையில் என்னும் நூலை எழுதியவர் யார்?
⚡ஞானி
63) மனித வாழ்வை மாற்றி அமைத்த கண்டுபிடிப்பாளர்கள் - என்ற நூலை எழுதியவர் யார்?
⚡ஆர் .கே .வி கோபாலகிருஷ்ணன்
⚡மொழிபெயர்த்தவர்( அய்யாசாமி)
Post a Comment