6th std tamil- 30 Q A
1)வேலு நாச்சியாரை காட்டிக் கொடுக்கும் படி ஆங்கிலேயரால் வற்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண் யார்?
⭐உடையாள்
2)வேலு நாச்சியாரின் காலம் என்ன ?
⭐1730 to 1796
3)வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு எந்த ஆண்டு ?
⭐1780
4)ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார்?
⭐வேலுநாச்சியார்
5)கலீல் ஜிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
⭐லெபனான்
6)கலீல் ஜிப்ரானின் நூலை தீர்க்கதரிசி என்னும் பெயரில் மொழி பெயர்த்தவர் யார்?
⭐புவியரசு
7)மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு எது?
⭐ மணிபல்லவத் தீவு
8)மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபியில் உணவு இட்ட பெண் யார் ?
⭐ஆதிரை
10)பாதம் என்னும் சிறுகதை யாருடையது?
⭐எஸ் ராமகிருஷ்ணன்
11) பாதம் என்னும் சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
⭐தாவரங்களின் உரையாடல்
12)எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நூல்கள் என்னென்ன?
⭐தேசாந்திரி
⭐உப பாண்டவம்
⭐கதாவிலாசம்
⭐கால் முளைத்த கதைகள்
(இராமன் உபயோகமா தேசத்துக்கே கதை சொல்கிறார்)
13)அன்பினில் இன்பம் காண்போம்
அறத்தினில் நேர்மை காண்போம்
எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் யார் ?
⭐புலவர் முத்தரையனார்
( மலேசியா கவிஞர்)
14)கவிமணி தேசிய விநாயகம் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்?
⭐36
15)ஆசிய ஜோதி என்னும் நூல் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது?
⭐ light of asia
16)light of asia என்பது யார் எழுதிய நூல்?
⭐ எட்வின் அர்னால்டு
17)புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது ?
⭐ஆசிய ஜோதி
18)வாழ்க்கை என்பது
நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில்
வாழும் வரை
என்று கூறியவர் யார் ?
⭐அன்னை தெரசா
19)கைலாஷ் சத்தியமூர்த்தி தொடங்கிய இயக்கம் எது?
⭐குழந்தைகளை பாதுகாப்போம்
20)குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம்.
உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது .
என்று கூறியவர் யார்?
⭐கைலாஷ் சத்தியமூர்த்தி
21)குழந்தைகளை பாதுகாப்போம் என்ற இயக்கத்தின் மூலம் எத்தனை குழந்தை தொழிலாளர்களை கைலாசமூர்த்தி மீட்டுள்ளார்?
⭐ 86,000
22)உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக எத்தனை நாடுகளில் சத்தியமூர்த்தி அவர்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்?
⭐103(80000km)
23)ஹிதேந்திரனின் பெற்றோர் யாவர்?
⭐அசோகன் ,புஷ்பாஞ்சலி
24)தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு -அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
என்ற பாடலில் பயின்றுள்ள அணி என்ன?
⭐ இயல்பு நவிற்சி அணி
25)கும்பி என்பதன் பொருள் என்ன?
⭐வயிறு
26)பூதலம் என்பதன் பொருள் என்ன?
⭐ பூமி
27)வ உ சி சென்னை செல்லும் போது யாரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
⭐பாரதியார்
28)வ உ சி யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?
⭐பாரதியார்
29)வ.உ.சி சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை எப்போது பதிவு செய்தார்?
⭐1906 அக் 16
30)பாரதியாரை இவர் இந்திய நாட்டின் சொத்து இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கூறியவர் யார்?
⭐காந்தி அடிகள்
Good.will you prepare Science,maths,psychology questions also.
ReplyDeleteNice thank u
ReplyDelete