11th std tamil new book-தமிழ் -இயல் 10-கேள்வி-பதில்
G1)பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்றும் கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்பட்டவர் யார் ?
⭐தாகூர்
2)தாகூர் தன்னுடைய எத்தனையாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார் ?
⭐16
3)கீதாஞ்சலி என்ற கவிதை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு தாகூர் எந்த ஆண்டு பெற்றார்?
⭐1913
4)ஜாலியன் வாலாபாக் படுகொலையால் மனம் வருந்தி ஆங்கில அரசை கண்டித்து அவர்கள் வழங்கிய எந்த பட்டத்தை துறந்தார்?
⭐சர்
5) குருதேவ் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் யார்?
⭐தாகூர்
6) குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும் .தங்கள் வேலையை தாங்களே கவனித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தாகூர் எந்த பல்கலைக்கழகத்தை நிறுவினார்?
⭐விஸ்வபாரதி பல்கலைக்கழகம் (1921)
7)அமர் சோனார் பங்களா என்னும் வங்காளதேசத்தின் நாட்டுப்பண்ணை எழுதியவர் யார்?
⭐தாகூர்
8)சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள தாகூரின் கடிதங்கள் என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார் ?
⭐த .நா. குமாரசாமி
9)த.நா. குமாரசாமி அவர்களுக்கு தெரிந்த மொழிகள் என்னென்ன?
⭐தமிழ்
⭐சமஸ்கிருதம்
⭐தெலுங்கு
⭐வங்கம்
⭐பாலி
⭐ஆங்கிலம்
10)வங்க அரசு தமிழ் - வங்க மொழிகளுக்கு குமாரசாமி ஆற்றிய தொண்டைப் பாராட்டி எந்த விருதை அளித்தது ?
⭐நேதாஜி இலக்கிய விருது
11)ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
என்னும் கவிதையை எழுதியவர் யார்?
⭐இன்குலாப்
12)இன்குலாபின் இயற்பெயர் என்ன ?
⭐சாகுல் அமீது
13) இன்குலாப் கவிதைகள் எந்த பெயரில் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளன?
⭐ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
14) இன்குலாபின் மரணத்திற்குப் பிறகு அவருடைய உடல் அவர் விரும்பியபடி எந்த மருத்துவ கல்லூரிக்கு கொடையாக அளிக்கப்பட்டது?
⭐செங்கை அரசு மருத்துவக் கல்லூரி
15)தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது ?
⭐மனோன்மணீயம்
16) மனோன்மணீயம் என்ற நூல் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது ?
⭐லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி
17) பேராசிரியர் சுந்தரனார் எந்த ஆண்டு தமிழில் எழுதினார் ?
⭐1891
18) மனோன்மணியம் நூல் எந்த பாவினால் அமைந்தது?
⭐ஆசிரியப்பா
19) மனோன் மணியம் நூல் எத்தனை அங்கங்களையும் எத்தனை களங்களையும் உள்ளடக்கியது?
⭐ 5 அங்கங்கள் , 20 களங்கள்
20)மனோன்மணியத்தில் உள்ள கிளைக்கதை எது?
⭐சிவகாமியின் சரிதம்
21) சுந்தரனார் எந்த ஆண்டு பிறந்தார் ?
⭐1855
22)சுந்தரனார் எந்த கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்?
⭐திருவனந்தபுரம் அரசு கல்லூரி
23) சென்னை மாகாண அரசு பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களுக்கு எந்த பட்டம் வழங்கி சிறப்பித்தது?
⭐ராவ்பகதூர்
24)தமிழக அரசு எங்கு சுந்தரனாரை சிறப்பிக்கும் வகையில் பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது ?
⭐திருநெல்வேலி
25)கடிநகர் என்பதன் பொருள் என்ன ?
⭐காவல் உடைய நகரம்
26)காண்டி என்பதன் பொருள் என்ன ?
⭐காண்க
27) பூம்பராகம் என்பதன் பொருள் என்ன?
⭐பூவில் உள்ள மகரந்தம்
28) ஆசு இலா என்பதன் பொருள் என்ன ?
⭐குற்றம் இல்லாத
29) தோட்டி என்பதன் பொருள் என்ன ?
⭐துறட்டி
30)அயம் என்பதன் பொருள் என்ன ?
⭐ஆடு ,குதிரை
31)புக்கவிட்டு என்பதன் பொருள் என்ன?
⭐போக விட்டு
32)சீரிய தூளி என்பதன் பொருள் என்ன?
⭐நுண்ணிய மணல்
33) சிறுகால் என்பதன் பொருள் என்ன ?
⭐வாய்க்கால்
34) பரல் என்பதன் பொருள் என்ன ?
⭐கல்
35) முந்நீர் மடு என்பதன் பொருள் என்ன?
⭐கடலாகிய நீர்நிலை
36) அண்ட யோனி என்பதன் பொருள் என்ன ?
⭐ஞாயிறு
37) சாடு என்பதன் பொருள் என்ன?
⭐பாய்
38) ஈட்டியது என்பதன் பொருள் என்ன ?
⭐சேகரித்தல்
39)எழிலி என்பதன் பொருள் என்ன ?
⭐மேகம்
40)நாங்கூழ் புழு என்பதன் பொருள் என்ன?
⭐மண்புழு
41)பாடு என்பதன் பொருள் என்ன?
⭐உழைப்பு
42)ஓவா என்பதன் பொருள் என்ன ?
⭐ஓயாத
43)வேதித்து என்பதன் பொருள் என்ன ?
⭐மாற்றி
44)நர்த்தகி நடராஜ் என்னும் பரதநாட்டிய கலைஞர் எந்த ஊரை சேர்ந்தவர் ?
⭐மதுரை (அனுப்பானடி)
45)நர்த்தகி நடராஜ் யாருடைய நடனத்தால் ஈர்க்கப்பட்டார்?
⭐வைஜெயந்திமாலா
46) நர்த்தகி நடராஜ் குரு யார்?
⭐தஞ்சை கிட்டப்பா
47) நர்த்தகி நடராஜ் நர்த்தகி என்ற பெயரைச் சூட்டியவர் யார்?
⭐கிட்டப்பா
48)நர்த்தகி நடராஜ் பெற்ற விருதுகள் என்னென்ன?
⭐தமிழக அரசின் கலைமாமணி விருது
⭐இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது
⭐இந்திய அரசு தொலைக்காட்சியின் ஏ கிரேடு கலைஞர்
⭐இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சிறந்த கலைஞர்
⭐பெரியார் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்
49)தாமரை நெஞ்சம் என்னும் நூலை எழுதியவர் யார் ?
⭐அகிலன்
50)நர்த்தகி நடராஜ் நடத்தும் அறக்கட்டளையின் பெயர் என்ன?
⭐வெள்ளியம்பலம் அறக்கட்டளை
51)திருநங்கைகளின் முதன்முதலில் கடவுச்சீட்டு ,தேசிய விருது ,மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் யார் ?
⭐நர்த்தகி நடராஜ்
52)இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் யார் ?
⭐பிரித்திகா யாஷினி(சேலம் மாவட்டம்)
53)லோக் அதாலத் நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டவர் யார் ?
⭐ஜோயிதா மோண்டல் மாஹி (மேற்கு வங்கம்)
54)தமிழ்நாட்டில் மூன்றாம் பாலின பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதல் நபர் யார்?
⭐தாரிகா பானு
55)தாரிகா பானு எங்கு படித்தார்?
⭐திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் (காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி)
56)இளமை விருந்து என்ற நூலை எழுதியவர் யார் ?
⭐திரு.வி.க
57)திரு.வி.க வெஸ்லி பள்ளியில் படித்தபோது யாரிடம் தமிழ் படித்தார்?
⭐நா . கதிரைவேல்
58) தமிழோடு சைவ நூல்களையும் திரு.வி.க யாரிடம் பயின்றார்?
🌟மயிலை தணிகாசலம்
59)திரு வி க எழுதிய நூல்கள் என்னென்ன?
⭐பெண்ணின் பெருமை
⭐முருகன் அல்லது அழகு
⭐மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
⭐என் கடன் பணி செய்து கிடப்பதே ⭐சைவத் திறவு
⭐இந்தியாவும் விடுதலையும் ⭐பொதுமை வேட்டல்
⭐திருக்குறள் விரிவுரை
60) திரு வி க எந்த இதழுக்கு ஆசிரியராக இருந்தார்?⭐ தேசபக்தன்
⭐நவசக்தி
61)தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர் யார்?
⭐திரு.வி.க
62) திரு.வி.க எந்த கல்லூரியில் தலைமை தமிழ் ஆசிரியராக இருந்தார்?
⭐சென்னை ராயப் பேட்டை வெஸ்லி கல்லூரி
63)சங்கத்தமிழ் அனைத்தும் தா என்ற கவிதையை எழுதியவர் யார் ?
⭐ஹெச் ஜி ரசூல்
64)மனைவியின் கடிதம் - ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
⭐த.நா. குமாரசாமி
65) நான் வித்யா என்ற நூலின் ஆசிரியர் யார் ?
⭐லிவிங் ஸ்மைல் வித்யா
Post a Comment