11th std tamil new book-இயல்-5-part-1
1)தொல்காப்பியம் கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வதை எவ்வாறு குறிப்பிடுகிறது?
⭐ ஓதற்பிரிவு
2)கல்வியின் பொருட்டு ஒருவருக்கு பெருமிதம் தோன்றும் என்று கூறிய நூல் எது?
⭐ தொல்காப்பியம்
3)உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் ,பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
⭐புறநானூறு
4)துணையாய் வருவது தூய நற் கல்வி என்று குறிப்பிடும் நூல் எது?
⭐திருமந்திரம்
5)கல்வி அழகே அழகு என்று குறிப்பிடும் நூல் எது?
⭐நாலடியார்
6)இளமையில் கல் என்று கூறியவர் யார்?
⭐ ஒளவையார்
7)சுதந்திரத்தினால் , தமிழ் நாடெங்கும் தமிழே ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் மற்றும் சமயம், வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொது மொழியாகவும் விளங்கி வந்தது என்பது யாருடைய கூற்று?
⭐மா.ராசமாணிக்கனார்
8)எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் (நிகண்டு) கணக்கும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
⭐கணக்காயர்
10)பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும், அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
⭐ஆசிரியர்
11)சமய நூலும், தத்துவ நூலும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
⭐குரவர்
12)கலைகள், கல்வி கற்பிக்கும் இடங்களாக எவை விளங்கின?
⭐ பள்ளிகள்
13) கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாக திகழ்ந்தது எது?
⭐மன்றம்
14)செயல்களை சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது எது?
⭐சான்றோர் அவை
15)கல்வி கற்பிக்கும் இடங்களை பள்ளி என்று கூறும் நூல் எது?
⭐பெரிய திருமொழி
16) கல்வி கற்பிக்கப்படும் இடங்களை ஓதும் பள்ளி என்று கூறும் நூல் எது?
⭐திவாகர நிகண்டு
17)கல்வி கற்பிக்கப்படும் இடங்களை கல்லூரி என்று கூறும் நூல் எது?
⭐சீவக சிந்தாமணி
18)சமணர்கள் தங்குமிடங்களிலே கல்வியைப் போதித்தனர்.இங்கே பள்ளி என்ற சொல்லுக்கு என்ன பொருள் ?
⭐படுக்கை
19)சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள் பற்றி எங்கு உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன?
⭐திருச்சி மலைக்கோட்டை ⭐கழுகுமலை
20)எங்கு உள்ள சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் 500 மாணவர்ளுக்கு கல்வி கற்பித்தார்?
⭐வந்தவாசி அருகில் வேடல்
21) விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியை நிறுவிய பெண் ஆசிரியர் யார்?
⭐பட்டினிக்குரத்தி
22)பட்டி மண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடமென்று எதில் குறிப்பிடப் பட்டுள்ளது?
⭐மணி மேகலை
23)ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்து பாங்கறிந்து ஏறுமின் என்று கூறும் நூல் எது?
⭐ மணி மேகலை
24) காஞ்சிபுரத்தில் பௌத்தப்பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றியவர் யார் ?
⭐யுவான் சுவாங்
25)தமிழகத் திண்ணைப் பள்ளி முறையை கண்டு வியந்து இம்முறையில் அமைந்த பள்ளியை ஸ்காட்லாந்தில் மெட்ராஸ் காலேஜ் என்ற பெயரில் நிறுவியவர் யார்?
⭐ரெவரெண்ட் பெல்
26) ஸ்காட்லாந்தில் திண்ணைப் பள்ளி முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
⭐மெட்ராஸ் சிஸ்டம்
⭐ பெல் சிஸ்டம்
⭐மானிடரி சிஸ்டம்
27)திண்ணைப் பள்ளிகளை எவ்வாறு அழைத்தனர்?
⭐தெற்றிப் பள்ளிகள்
28) திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
⭐ கணக்காயர்கள்
29) ஆங்கிலேயர்கள் திண்ணைப் பள்ளிகள், பாட சாலைகள், மக்தாபுகள் , மதரஸாக்கள் ஆகியவற்றை எவ்வாறு அழைத்தனர்?
⭐நாட்டுக் கல்வி
30) சென்னை மாகாணத்தில் 12498 திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன என்றும் அவற்றின் கல்வித்தரம் பல ஐரோப்பிய நாடுகளின் அப்போதைய கல்வித் தரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவே காணப்பட்டது என்றும் யார் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது ?
⭐தாமஸ் மன்றோ
31)கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்
தன்மை யிலாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மைப் பயத்தல் இல் .
என்று கூறும் நூல் எது?
⭐திரிகடுகம்
32) மரபு வழிக் கல்வி முறைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
⭐குரு குலக் கல்வி முறை
⭐திண்ணைப் பள்ளிக் கல்வி முறை
⭐உயர்நிலைக் கல்வி முறை
33) சென்னை ஆளுநர் சர்.தாமஸ் மன்றோ ஆணையின் படி பொதுக் கல்வி வாரியம் எப்போது தொடங்கப்பட்டது?
⭐1826
34)சென்னை மருத்துவக் கல்லூரி எப்போது தொடங்கப்பட்டது?
⭐1835
35)பொதுக் கல்வித்துறை நிறுவப்பட்டு பொதுக் கல்வி இயக்குனர் எப்போது நியமிக்கப்பட்டார்?
⭐1854
36)சென்னை பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்பட்டது?
⭐ 1857
37) ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது?
⭐1794
38)ஸ்கூல் ஆஃப் சர்வே நிறுவனம் எப்போது கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது?
⭐1859
39)தமிழ்நாடு இடை நிலைக் கல்வி வாரியம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
⭐1910
40)பள்ளியிறுதி வகுப்பு - மாநில அளவிலான பொதுத் தேர்வு எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது ?
⭐1911
41)அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்?
⭐ஜான் கூட்டன் பர்க் ( ஜெர்மனி)
42) தரங்கம்பாடியில் முதன் முதலில் அச்சுக் கூடத்தை ஏற்படுத்தியவர்கள் யார்?
⭐டச்சுக்காரர்கள்
43) இந்தியாவில் முதன்முதலில் அச்சேறிய மொழி எந்த மொழி?
⭐தமிழ்
44)1813 சாசனச் சட்டத்தின்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக எவ்வளவு ரூபாய் ஒதுக்கியது?
⭐ 1 லட்சம்
45)ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப் போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது என்று கூறியவர் யார்?
⭐ஹென்றி ஆடம்ஸ்
46)தற்காலக் கல்வி முறையும் தேர்வு முறையும் எந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு உருவானது?
⭐1854- சார்லஸ் வுட் குழு
47) இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என்று போற்றப்படுவது எது?
⭐சார்லஸ் வுட்டின் அறிக்கை
48) தாய் மொழி வழிக் கல்வி, சீருடைமுறை போன்றவற்றை கட்டாயமாக்கியது எந்த குழு?
⭐ஹண்டர் கல்விக்குழு (1882)
49) 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படல் வேண்டும் என்று வலியுறுத்திய சட்டம் எது?
⭐ இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 45
50)ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு விழுக்காடாக இருந்தது ?
⭐15
It is very useful to me
ReplyDelete