ஆறாம் வகுப்பு-தமிழ்-இயல்-1-தமிழ்க்கும்மி

தமிழ்க்கும்மி

⭐தமிழ்க்கும்மி என்ற பாடலை எழுதியவர் பெருஞ்சித்திரனார்.

⭐கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் பெருஞ்சித்திரனார்.

அருஞ் சொற்பொருள்

➡️ஆழிப் பெருக்கு- கடல் கோள்
➡️மே தினி - உலகம்
➡️ஊழி-நீண்டதொருகாலப் பகுதி ➡️உள்ளப் பூட்டு -அறிய விரும்பாமை

நூல் வெளி

➡️பெருஞ்சித்திரனார் இயற்பெயர் - மாணிக்கம்

➡️சிறப்புப் பெயர்- பாவலரேறு

➡️ எழுதிய நூல்கள் - கனிச்சாறு, கொய்யாக் கனி, பாவியக் கொத்து ,நூறாசிரியம்

➡️ நடத்திய இதழ்கள் - தென் மொழி, தமிழ்ச் சிட்டு ,தமிழ் நிலம்

➡️தமிழ்க் கும்மி பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

➡️கனிச்சாறு என்ற நூல் 8 தொகுதிகளாக வெளி வந்துள்ளது.

1 comment:

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.