பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க ஆலோசனை கூறும் பள்ளிக்கல்வித்துறை

            தமிழக பள்ளி கல்வித்துறை பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனை வழங்கியுள்ளது .

இதை தலைமை ஆசிரியர்கள், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளிக்கு முன் தினம் ஆன திங்கள்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

தீபாவளி பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும் காலையில் இறைவணக்க கூட்டத்தில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

இதை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

➡️குழந்தைகள் பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.இளம் சிறார்கள் வெடிகள் கொளுத்த  அனுமதிக்கக்கூடாது.

➡️பட்டாசு கொளுத்தும்போது தளர்வான ஆடைகளை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது டெரிகாட்டன்  அல்லது  டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது.

➡️பட்டாசு கொளுத்தும் இடத்துக்கு அருகில் ஒரு வாளியில் தண்ணீரையோ அல்லது மணலையோ வைத்துக்கொள்ளுங்கள் .

➡️ பட்டாசை கையில் வைத்துக்கொண்டு அல்லது உடலுக்கு அருகில் வைத்துப் பற்ற வைக்கக் கூடாது. மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்து வெடியுங்கள். வெடிக்காத பட்டாசுகளை குனிந்து பரிசோதிப்பதை தவிர்த்தல் வேண்டும் .

➡️மூடிய பெட்டிகளில் அல்லது பாட்டிலின் மேல் வைத்து பட்டாசுகளை வெடிக்க செய்யாதீர்கள். கண்ணாடிப் பொருட்கள் வெடித்து கண்களில் பட்டு கண் பார்வை பாதிப்படையும்.

➡️ ராக்கெட்டுகளை குடிசை இல்லாத வெட்டவெளிப் பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.

➡️ பட்டாசுகளை மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளிலும், தெருக்களிலும் ,சாலைகளிலும் வெடிக்கக்கூடாது .

➡️பட்டாசுகளை விற்பனை செய்யும் கடை முன்பகுதியிலோ அல்லது அருகிலோ வெடிக்கக்கூடாது.

➡️பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகிலோ அல்லது பெட்ரோல் எரிபொருள் கடைகளுக்கு முன்பு பட்டாசுகளை வெடிக்க கூடாது.

➡️ மருத்துவமனைக்கு அருகில், முதியோர் இல்லங்களுக்கு அருகிலும் பட்டாசுகள் வெடிப்பதை தவிருங்கள்.

➡️விலங்குகளைத்
துன்புறுத்தும் வகையிலும் பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

➡️ அதிக சப்தம் உள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகள் பாதிக்கப்படக் கூடும்.

ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம் என்று கல்வித்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவார கால இடைவெளி மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் விழிப்புணர்வு செயல்முறை காட்சிகள் செய்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்களை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

பாதுகாப்பான முறையில் கொண்டாடுவோம் விபத்துகளைத் தடுப்போம்.

Source vikadan

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.